இந்திய அணியின் கேப்டன்சி விவகாரம் - ரவிசாஸ்திரி பேச்சால் சர்ச்சை
விராட் கோலியின் கேப்டன்சி விவகாரத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வகையில் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்தே கேப்டன்சி பிரச்சினை இந்திய அணியில் பெரும் பூகம்பமாக வெடித்து வருகிறது. விராட் கோலி மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் மாறுபட்ட கருத்துக்களை கூறியதால், யார் பொய் சொல்கிறார்கள் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
இதனிடையே விராட் கோலிக்கு ஆதரவாக முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி களமிறங்கி பேசியுள்ளார். விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு முக்கிய காரணம் ஐசிசி கோப்பைகள் தான். அவர் ஒரு உலகக்கோப்பை கூட வென்றுக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளே அழுத்தம் கொடுத்தது.
ஒரு கேப்டனாக சவுரவ் கங்குலி கூட தான் உலகக்கோப்பை வென்றுக்கொடுக்கவில்லை. இதற்கு எல்லாம் பதில் உண்டா என்பது போல பேசியுள்ளார். வெற்றிகரமான கேப்டன் என்பதை ஐசிசி கோப்பையை வென்றுக்கொடுத்தாரா என்பதை வைத்து எப்படி நிர்ணயம் செய்வார்கள் என ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்படி ஐசிசி கோப்பை வென்றுக்கொடுப்பவர் தான் சிறந்த கேப்டன் என்றால் சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட, லக்ஷ்மண் ஆகியோர் கூட தான் உலகக்கோப்பையை வென்றதில்லை. அதற்கென்று அவர்கள் மோசமான வீரர்கள் என்று கூறி விட முடியுமா? பின்னர் எப்படி கோலியை விமர்சிக்கலாம்.
சச்சின் டெண்டுல்கரே 6 உலகக் கோப்பைகளில் விளையாடிப் பிறகுதான் கடைசியில் ஒரு கோப்பையை வென்றார். எனவே உலகக்கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பதற்காக விமர்சிக்கக்கூடாது. தனிப்பட்ட விளையாட்டு எப்படி உள்ளது என்பதை தான் பார்க்க வேண்டும் என ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.