ரவீந்திர ஜடேஜா செய்த மிகப் பெரும் உதவி! நெகிழ்ந்து போன மைக்கல் வாகன்: அவரே வெளியிட்ட புகைப்படம்
இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா செய்த செயல் இங்கிலாந்து ரசிகர்கள் பலரையும் பாராட்ட வைத்துள்ளது.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இரு அணிகளுமே தலா 1-1 என்று சமநிலையில் உள்ளன. இதையடுத்து நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 2-ஆம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளது.
இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா தன்னுடைய டெஸ்ட் டீ சர்ட்டில், இந்திய அணியில் தற்போது விளையாடி வரும் அனைத்து வீரர்களின் கையெழுத்தை வாங்கி, அதை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன் தொண்டு நிறுவனத்திற்கு பரிசாக கொடுத்துள்ளார்.
இதை மைக்கல் வாகன் தன்னுடைய இன்ஸ்டாபக்கத்தில் பதிவிட்டு, இதன் மூலம் அதிக பணம் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஜடேஜாவின் இந்த செயலைப் பார்த்து ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Fantastic ruthless performance from England .. that’s as good as it gets .. To do that after Lords shows great character which comes from the Skipper .. India !!!!! A few days to forget .. they really have been useless !!! #ENGvIND
— Michael Vaughan (@MichaelVaughan) August 28, 2021
இதற்கு முன் இந்தியா அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த போது, மைக்கல் வாகன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் யூஸ்லெஸ் என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.