CSK அணியின் அடுத்த கேப்டன் இவர்தான்! டோனி இடத்துக்கு யார் என்ற கேள்விக்கு கிடைத்த பதில்.. கசிந்த தகவல்
ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த கேப்டனாக ரவீந்திர ஜடேஜா தான் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
அமீரகத்தில் நடைபெற்று வந்த 14வது ஐபிஎல் தொடர் சமீபத்தில் முடிந்த நிலையில் சிஎஸ்கே அணி கோப்பையை 4வது முறையாக தட்டி சென்றது. சிஎஸ்கே இந்தாண்டு கோப்பையை வென்றது ரசிகர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமாக இருந்த போதும், அந்த அணியின் எதிர்காலம் குறித்த கவலை அனைவருக்கும் உள்ளது.
ஏனென்றால் டோனிக்கு தற்போதே 40 வயது ஆகிவிட்டது. எனவே அடுத்த கேப்டனாக யாரை நியமிப்பது என்ற குழப்பம் தான் அணிக்குள் எழுந்துள்ளது. ஆனால் இந்தாண்டு தொடர் முடிந்தவுடனேயே தோனி தெளிவாக ஒரு கருத்தை தெரிவித்துவிட்டார். அதாவது அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் நான் நிச்சயம் பங்கேற்பேன். சென்னையில் தான் எனது ஓய்வு இருக்கும் எனத் தெரிவித்துவிட்டார்.
எனினும் அடுத்தாண்டு 2 புதிய அணிகள் ஐபிஎல்-ல் இணைக்கப்படுவதால் மெகா ஏலத்தின் போதே புதிய கேப்டனை தேர்ந்தெடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த கேப்டனாக ரவீந்திர ஜடேஜாதான் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. சுரேஷ் ரெய்னாவின் ஃபார்மும் மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே அவரை அடுத்தாண்டு சிஎஸ்கே தக்கவைக்குமா என்பது தெரியவில்லை.
எனினும் ஜடேஜா மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். டோனிக்கு பல்வேறு சமயங்களில் உதவியுள்ளார். இதனால் அவரை அடுத்த கேப்டனாக நியமிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.