சிறுவன் Rayan உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த மொராக்கோ மன்னர்

Morocco Rayan Rayan Morocco Save Rayan King Mohammed VI
By Ragavan Feb 05, 2022 10:35 PM GMT
Report

மொராக்கோவில் கிட்டத்தட்ட 5 நாட்களாக கிணற்றுக்கு சிக்கி இறந்த 5 வயது சிறுவன் Rayan-ன் பெற்றோருக்கு அந்நாட்டின் மன்னர் ஆறாம் மொஹமது (King Mohammed VI) இரங்கல் தெரிவித்துள்ளார்.

மொராக்கோவின் Chefchaouen மாநிலத்தில் உள்ள Ighara கிராமத்தை சேர்ந்த Rayan Awram என்ற 5 வயது சிறுவன் கடந்த 1-ஆம் திகதி (செவ்வாய்கிழமை) மாலை, 104 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

அதனைத் தொடர்ந்து, கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக இரவும் பகலும் சிறுவனை மீட்கும்பணி நடந்தது. Rayan மீண்டு வர மொராக்கோ மட்டுமின்றி உலகம் முழுவதிலுமிருந்து வேண்டுதல்கள் குவிந்தன. சமூக வலைதங்களில் #SaveRayan என்ற ஹாஷ்டேக் கடந்த 3 நாட்களாக ட்ரெண்டாகி வந்தது.

புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் சிறுவன் நலமாக இருப்பதாகவும், அவனுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் தண்ணீர் கிணற்றுக்கு அனுப்பப்பட்டதாகவும் செய்திகளுடன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகின. ரயனின் தந்தையும், தனது மகன் தண்ணீர் குடிப்பதை மேலிருந்து வீடியோவில் பார்த்ததாகவும் கூறினார்.

தொடந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பள்ளம் தோண்டும் பனி நடைபெற்று வந்தது. சிறுவனை இன்னும் சில மீட்டர்களில் நெருங்கிவிடுவோம் என மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறினர்.

ஆனால், சிறுவநின் நிலை குறித்து எந்த தகவலையும் யாரும் வெளியிடவில்லை, அதன்பிறகு புதிய புகைப்படமோ, வீடியோவோ வெளியாகவில்லை.

உலகம் முழுவதிலும் இருந்து வேண்டுதல் குரல்கள் மட்டுமே அதிகரித்தன. சம்பவ இடத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி 'எழுந்து வா Rayan', 'எழுந்து வா மகனே' என கோஷம் எழுப்பப்பட்டது. மேலும் அங்கிருந்த மக்கள் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், கிணற்றைச் சுற்றியுள்ள நிலம் இடிந்துவிழும் அபாயம் ஏற்பட்டதால், வெள்ளிக்கிழமை தற்காலிகமாக முயற்சிகள் நிறுத்தப்பட்டன.

அதற்கு பிறகு முழுவதுமாக ஆயுதங்களைக் கொண்டு கைகளாலேயே சிறுவன் இருக்கும் இடத்தை நோக்கி சுரங்கம் தோண்டப்பட்டது. இதனாலேயே, நேரமும் தாமதமாகிக்கொண்டே இருந்தது. இருப்பினும், சிறுவனை உயிருடன் மீட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் Rayan சடலமாகவே மீட்கப்பட்டான்.

சிறுவன் முன்பே உயிரிழந்திருக்கலாம் என்றும் இந்தவிடயம் மொராக்கோ மன்னருக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மீட்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, அவர் சிறுவன் இறந்துவிட்டான் என்றும் அவனது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இறங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அறிக்கை ஒரே வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து, உலகம் முழுவதிலுமிருந்து இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டுவருகிறது.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US