மும்பை, சென்னை இரண்டு அணிகளுக்குமே ஆப்பு? பிளே ஆப் விதியை மாற்றும் SRH-RCB:எப்படி தெரியுமா?
டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில், இன்று பெங்களூரு அணி அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் சென்னை அணியின் இரண்டாவது இடத்திற்கு பெரும் ஆபத்து உள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்று முக்கியமான இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணியும், பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதவுள்ளன.
இப்போட்டியில் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் ஹைதராபாத் அணியை 177 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும், அதே சமயம் ஹைதராபாத் அணி முதலிப் பேட்டிங் ஆடினால் 120 ஓட்டங்கள் எடுத்தால் 48 பந்துகளிலும், 140 ஓட்டங்கள் அடித்தா 8.4 ஓவர்களிலும் சேஸ் செய்ய வேண்டும்.
இது நடந்தால் மட்டுமே மும்பை அணியால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். மும்பைக்கு மட்டுமின்றி, இன்று சென்னை அணியும், பெங்களூரு அணியின் ஆட்டத்தை கூர்ந்து கவனிக்கும் ஒரு வேளை இன்று, பெங்களூரு அணி, டெல்லியை 163 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், பெங்களூரு அணி இரண்டாவது இடத்திற்கு சென்றுவிடும், சென்னை அணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும்.
ஐபிஎல் தொடரில், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பிளே ஆப் சுற்றில் ஒரு முறை தோற்றால் கூட, அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.