அந்த நாள் எங்கள் இதயங்களை உடைத்தது! துயர சம்பவத்திற்கு பின் RCBயின் முதல் பதிவு
ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தில் நிகழ்ந்த துயரத்தையடுத்து RCB அணி நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
முதல் முறையாக ஐபிஎல் கிண்ணத்தை வென்ற RCB
கடந்த ஜூன் 3ஆம் திகதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக ஐபிஎல் கிண்ணத்தை வென்றது.
இதன்மூலம் RCB அணி ரசிகர்களின் 18 ஆண்டுகால ஏக்கம் தீர்ந்ததால், 4ஆம் திகதி மைதானத்தில் நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதனால் மைதானத்திற்கு வெளியே கூடியிருந்த ஏராளமான மக்களிடையே 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 56 பேர் காயமடைந்தனர்.
இந்த துயர சம்பவத்தையடுத்து, கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் கழித்து தற்போது RCB அணி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதயப்பூர்வமான கடிதம்
அதில், "அன்புள்ள 12வது வீரர் படையே, இது உங்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான கடிதம்! நாங்கள் பதிவிட்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகப்போகிறது. மௌனமாக இருந்ததற்கு காரணம் இல்லாமை அல்ல, அது துக்கம்.
இந்த இடம் ஒரு காலத்தில் நீங்கள் மிகவும் ரசித்த ஆற்றல், நினைவுகள் மற்றும் தருணங்களால் நிறைந்திருந்தது. ஆனால் ஜூன் 4 எல்லாவற்றையும் மாற்றியது.
அந்த நாள் எங்கள் இதயங்களை உடைத்தது, அன்றிலிருந்து அமைதி எங்கள் இடத்தைப் பிடித்துக் கொள்ளும் வழியாக இருந்து வருகிறது.
அந்த அமைதியில், நாங்கள் துக்கப்படுகிறோம். கேட்டல், கற்றல் மற்றும் மெதுவாக வெறும் பதிலை விட வேறு ஒன்றை உருவாக்கத் தொடங்கினோம்.
நாங்கள் உண்மையிலேயே நம்பும் ஒன்று. அப்படித்தான் RCB CARES உயிர்பெற்றது. அது நம் ரசிகர்களை மதிக்க, குணப்படுத்த மற்றும் அருகில் நிற்க வேண்டிய தேவையில் இருந்து வளர்ந்தது.
நமது சமூகம் மற்றும் ரசிகர்களால் வடிவமைக்கப்பட்ட அர்த்தமுள்ள செயலுக்கான தளம். இன்று கொண்டாட்டத்துடன் அல்ல, கவனத்துடன் இந்த இடத்திற்கு நாங்கள் திரும்புகிறோம்.
பகிர்ந்துகொள்ள, உங்களுடன் நிற்க, முன்னோக்கி நடக்க, ஒன்றாக. கர்நாடகாவின் பெருமையைத் தொடர RCB CARES மற்றும் நாங்கள் எப்போதும் செய்வோம்" என கூறப்பட்டுள்ளது.
Dear 12th Man Army, this is our heartfelt letter to you!
— Royal Challengers Bengaluru (@RCBTweets) August 28, 2025
𝗜𝘁’𝘀 𝗯𝗲𝗲𝗻 𝗰𝗹𝗼𝘀𝗲 𝘁𝗼 𝘁𝗵𝗿𝗲𝗲 𝗺𝗼𝗻𝘁𝗵𝘀 𝘀𝗶𝗻𝗰𝗲 𝘄𝗲 𝗹𝗮𝘀𝘁 𝗽𝗼𝘀𝘁𝗲𝗱 𝗵𝗲𝗿𝗲.
The Silence wasn’t Absence. It was Grief.
This space was once filled with energy, memories and moments that you… pic.twitter.com/g0lOXAuYbd
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |