மும்பை ஹாப்பி! பஞ்சாப்பை விரட்டியடித்த பெங்களூரு: பிளே ஆப்பில் நுழையப்போவது யார்?
பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு மற்றும் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.
இதில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ஒட்டங்கள் எடுத்தது.
பெங்களூரு அணியில் அதிகபட்சமாக, டேவ்டட் படிக்கல் 40 ஓட்டங்களும்,விராட் கோலி 25 ஓட்டங்களும், மேக்ஸ்வேல் அரைசதம் அடித்து 57 ஓட்டங்கள் எடுத்தனர். அதன் பின் 165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர்களான ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 91 ஓட்டங்கள் குவித்த நிலையில், கே.எல்.ராகுல் 39 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து நிக்கோலஸ் பூரான் 3 ஓட்டங்களிலும், மயங்க அக்ர்வால் 27 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் எடுத்து 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்த தோல்வியின் மூலம் பஞ்சாப் அணியின் பிளே ஆப் கனவு முற்றிலும் சிதைந்தது. இதன் மூலம் மும்பை அணி ரசிகர்கள் மற்றும் அந்தணியினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஏனெனில் இந்த போட்டியில் பஞ்சாப் வெற்றி பெற்றிருந்தால், அது மும்பை அணிக்கு கடும் சவாலாக இருந்திருக்கும், இந்த தோல்வியின் மூலம் மும்பை அணி அடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றாலே போதும்.
அதுமட்டுமின்றி இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி ஹைதராபாத் அணியுடன் தோற்றால், மும்பை அணி அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.