RCB வீரர் யாஷ் தயாள் மீது பெண் பரபரப்பு புகார்
திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக யாஷ் தயாள் மீது பெண் புகார் அளித்துள்ளார்.
யாஷ் தயாள்
உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த யாஷ் தயாள், 2025 ஐபிஎல் தொடரில் RCB அணிக்காக விளையாடினார்.
இந்த தொடரில், 15 போட்டிகளில் விளையாடி, 13 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்நிலையில், யாஷ் தயாள் மீது பெண் ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஜூன் 14 2025 அன்று பெண்களுக்கான 181 என்னும் உதவி எண்ணில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், இந்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இணையம் மூலமாக முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் அளித்துள்ளார்.
திருணம் செய்வதாக ஏமாற்றிவிட்டார்
இதனையடுத்து, புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து ஜூலை 21 ஆம் திகதிக்குள் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
பெண் அளித்த முதல் தகவல் அறிக்கையில், "யாஷ் தயாள் திருமணம் செய்வதாக கூறி என்னிடம் 5 ஆண்டுகளாக உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் என்னை பயன்படுத்தி ஏமாற்றி விட்டார்.
அவரது குடும்பத்தினரிடம் என்னை ‘மருமகள்’ என அடையாளப்படுத்தியதால், அவரை நம்ப தொடங்கினேன். அவர் நிதி ரீதியாகவும் என்னை பயன்படுத்திக்கொண்டார்.
அவரின் நோக்கம் தெரிந்து விலக முயற்சித்த போது, என்னை கடுமையாக தாக்கினார். மேலும், இதே போல் பல பெண்களை அவர் ஏமாற்றியது தெரியவந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அந்த பெண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், யாஷ் தயாள் உடன் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ கால் ஸ்கிரீன்சேட் உள்ளிட்ட ஆதாரங்களை அவர் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில், மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் ஒருவர், 11 பெண்களை வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |