போரை வெல்ல இஸ்ரேலியர்களுக்கு விரல் நகங்கள் போதும்... கொக்கரித்த பெஞ்சமின் நெதன்யாகு
திடீரென்று ஆயுத ஏற்றுமதிக்கு மறுப்பு தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பதிலளிக்கும் வகையில், இஸ்ரேலியர்கள் தங்கள் விரல் நகங்களால் போரை வெல்வார்கள் என பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ரஃபா மீதான தாக்குதல்
காஸாவில் ரஃபா பகுதி மீது தரைவழி தாக்குதலை முன்னெடுக்க இஸ்ரேல் ராணுவம் தயாராகி வரும் நிலையில், பேரழிவை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும் அனுமதிக்க முடியாது என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அழுத்தமளிக்கத் தொடங்கியது.
ஆனால் திட்டமிட்டதன்படி, ரஃபா மீதான தாக்குதல் முன்னெடுக்கப்படும் என்றே இஸ்ரேல் கூறி வந்தது. இதனையடுத்தே எச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை அமெரிக்கா ரத்து செய்தது.
ரஃபா பகுதியில் ஆயிரக்கணக்கான ஹமாஸ் வீரர்கள் மறைந்திருக்கலாம் என்றும், அக்டோபர் 7ம் திகதி பிடித்து செல்லப்பட்ட கைதிகளும் ரஃபா பகுதியில் காணப்படலாம் என்றே இஸ்ரேல் நம்புகிறது.
போரை வெல்ல முடியும்
இதனையடுத்து ரஃபா மீதான தாக்குதலை முன்னெடுக்க, அங்குள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது இந்த நிலையிலேயே பைடன் நிர்வாகம் ரஃபா தாக்குதலை ஏற்க முடியாது எனவும், அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் விளக்கமளித்துள்ளது.
ரஃபா நகரை கைப்பற்றாமல், இந்த 7 மாத கால போரில் வெற்றியில்லை என்றும் இஸ்ரேல் கூறிவருகிறது. மேலும், இந்த இக்கட்டான சூழலில் தனித்து விடப்படுவதாக இருந்தால், தனித்தே இனி செயல்படவும் தயார் என அமெரிக்காவை குறிப்பிடாமல் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலியர்களால் விரல் நகங்களாலும் போரை வெல்ல முடியும் என்றும் அவர் கொக்கரித்துள்ளார். விரல் நகங்களைவிடவும் தங்களிடம் துணிவு இருப்பதாகவும், கடவுளின் உதவியால் இஸ்ரேலிய மக்கள் ஒன்றிணைந்து வெற்றியை சொந்தமாக்குவோம் என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |