அணு ஆயுதங்களை பயன்படுத்த தயார்... சூசகமாக தெரிவித்த புடின்: அணு ஆயுதப்போர் வெடிக்குமா?
அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக இருப்பதாக சூசகமாக தெரிவித்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.
ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணு ஆயுதங்கள் வீசி, அமெரிக்காதான் முன்மாதிரியை உருவாக்கி வைத்துள்ளதாக புடின் தெரிவித்துள்ளார்.
நேற்று, நேட்டோ அமைப்பு முதன்முறையாக புடினுடைய நடவடிக்கைகளால் அணு ஆயுதப் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்திருந்தது.
இந்நிலையில், இன்று கிரெம்ளினில் ஆவேசமாக உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதியாகிய புடின், அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக இருப்பதாக சூசகமாக தெரிவித்தார்.
இரண்டாம் உலகப்போரின்போது, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணு ஆயுதங்கள் வீசி அமெரிக்கா முன்மாதிரியை உருவாகி வைத்துள்ளதாக தனது உரையில் குறிப்பிட்டார் புடின்.
அவரது பேச்சு, ரஷ்யா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இதுவரை யுத்தத்தில் அணு ஆயுதம் பிரயோகித்த ஒரே நாடு அமெரிக்காதான் என்பது குறிப்பிடத்தக்கது.