காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட குழந்தை... கரடிகளும் ஓநாய்களும் வாழும் சைபீரியக் காட்டில் சமாளித்த ஆச்சரியம்
சைபீரியக் காடு ஒன்றில் குழந்தை ஒன்று தன்னை நோக்கி கைநீட்டுவதைக் கண்டு திடுக்கிட்டார் அந்த நபர்.
Artyom Borisov என்ற அந்த நபர், உயரமாக வளர்ந்த புற்களுக்குள் மறைந்து அமர்ந்திருந்த ஒரு குழந்தை தன்னை நோக்கிக் கைநீட்டுவதைக் கண்டு, பதறி, அந்தக் குழந்தையை தூக்கி எடுத்திருக்கிறார்.
அவளது முகம், கைகள், கால்கள் என உடல் முழுவதும் காட்டுக் கொசுக்கள் கடித்ததால் சிவந்துபோயிருக்க, முற்றிலும் பயந்து போயிருந்தாள் அந்தக் குழந்தை.
அவளை Borisov வாரி அணைத்துக்கொள்ள, எனக்கு தண்ணீர் வேண்டும், உணவு வேண்டும் என அந்தக் குழந்தை கண்ணீர் விட்டுக் கதற, தன்னாலும் அழுகையை அடக்கிக்கொள்ள முடியவில்லை என்கிறார் அவர்.
நடந்தது என்னவென்றால், Karina Chikitova என்ற அந்த நான்கு வயது சிறுமி, தன் தந்தையைப் பின் தொடர்ந்து அடர்ந்த பயங்கரமான, ஓநாய்களும் கரடிகளும் வாழும் காட்டுக்குள் சென்றுவிட்டிருக்கிறாள். அப்போது வழி தவறிவிட, அவளும் அவளது நாயான Naidaவும் காட்டில் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள்.
சுமார் இரண்டு வாரங்கள், புல்லில் உறங்கி, காட்டிலிருந்த பழங்களை சாப்பிட்டபடி உயிர் வாழ்ந்திருக்கிறாள் Karina.
12 நாட்களுக்குப் பிறகுதான் அவளை Borisov கண்டு மீட்டிருக்கிறார்.
அந்த நேரத்தில், தன் நாயாகிய Naidaதான் தன்னைக் காப்பாற்றியதாக தெரிவித்திருந்தாள் Karina. தான் மிகவும் பயந்து போயிருந்ததாகவும், Naidaவின் அருகில் இருந்ததால் கதகதப்பாக உணர்ந்ததாகவும் அவள் கூறினாள்.
இது நடந்தது 2014ஆம் ஆண்டு. தற்போது 11 வயதாகிறது Karinaவுக்கு. தற்போது, தீவிரமாக பாலே நடனம் கற்றுக்கொண்டிருக்கிறாள் அவள்.