பிரித்தானியா வேண்டாம்... வேறு நாடுகளுக்குச் செல்லும் கோடீஸ்வரர்கள்
இவ்வளவு காலம் பிரித்தானியாவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, இப்போது பிரித்தானியா மோசம், பிரித்தானியா வேண்டாம் என்று கூறி வேறு நாடுகளுக்குச் செல்லத் துவங்கியுள்ளார்கள் கோடீஸ்வரர்கள் சிலர்.
பிரித்தானியா வேண்டாம்...
அவ்வகையில், பிரித்தானிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருந்தவரான ஜான் ஃப்ரெட்ரிக்சன் (81) என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் சென்று குடியமர்ந்துள்ளார்.
நார்வே நாட்டவரான ஜானுக்கு Chelseaஇல் 18 பில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய வீடு ஒன்று உள்ளது.
பிரித்தானியாவின் பொருளாதார நிலைமை மோசமாகிவிட்டதாகவும், பிரித்தானியாவின் வர்த்தகக் கொள்கை, குறிப்பாக ட்ரம்ப் தொடர்புடைய கொள்கைகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் கூறி பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளார் ஜான்.
ஜான் மட்டுமல்ல, ஸ்டீல் துறை ஜாம்பவானான லக்ஷ்மி மிட்டல் உட்பட பல கோடீஸ்வரர்கள் லண்டனை விட்டு வெளியேற திட்டமிட்டுவருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்கள் கூறினாலும், உண்மையில் இந்த கோடீஸ்வரர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறுவதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது.
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி மீது, non-dom tax status என்னும் வரி தொடர்பிலான பிரச்சினை தொடர்பில் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டதும், அதனால் சர்ச்சை எழுந்ததும் நினைவிருக்கலாம்.
அதாவது, பிரித்தானியாவில் வாழும் ஒருவர், தனது நிரந்தர வீடு பிரித்தானியாவில் இல்லை, அது வேறொரு நாட்டில் உள்ளது என்று தெரிவிக்கும் பட்சத்தில், அவர்கள் பிரித்தானியாவுக்கு வெளியே ஈட்டும் வருவாய்க்கு பிரித்தானியாவில் வரி செலுத்தவேண்டியதில்லை என்பதுதான் non-dom tax status நிலை.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வரி செலுத்துவதிலிருந்து தப்பி வந்தார்கள் சுமார் 70,000 கோடீஸ்வரர்கள்.
ஆனால், இப்போது இந்த விடயத்தில் பிரித்தானியா கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது.
இப்போது அவர்கள் குறிப்பிட்ட தொகையை வரியாக செலுத்துமாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், ஏதாவது காரணம் கூறி வெளிநாடுகளுக்குச் செல்லத் துவங்கியுள்ளார்கள் கோடீஸ்வரர்கள்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |