ஜப்பானில் கணக்கை தொடங்கியது குரங்கம்மை நோய்: லெவல்-ஒன் எச்சரிக்கை அறிவிப்பு
ஜப்பானில் திங்களன்று முதல் குரங்கம்மை காய்ச்சல் பதிவாகி இருப்பதை அந்த நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் பொதுவாக காணப்படும் இந்த குரங்கம்மை நோய் பரவலானது தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.
இந்த குரங்கம்மை காய்ச்சலானது பிரித்தானியா, ஜெர்மன், ஸ்வீடன் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய பல்வேறு நாடுகளில் பரவி மொத்தம் 14,000 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இந்த பாதிப்பில் 5 பேர் வரை உயிரிழந்து இருப்பதும் குறிப்பிடதக்கது.
The EU has approved a vaccine to combat the monkeypox outbreak, a day after the WHO declared the disease a global health emergency.https://t.co/GXCk26ABk1 pic.twitter.com/ekwk8tYs1U
— DW News (@dwnews) July 25, 2022
குரங்கம்மை காய்ச்சலின் நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், இந்த வார இறுதியில் உலக சுகாதார நிறுவனம் குரங்கம்மை பாதிப்பை உலகளாவிய அவசரநிலையாக அறிவித்தது.
மேலும் அதற்கு ஒருநாள் கழித்து குரங்கம்மை நோயிற்கான தடுப்பூசியாக (Imvanex) இம்வானெக்ஸ் என்ற நிறுவனத்தின் பெரியம்மை தடுப்பூசியை சந்தைப்படுத்த ஐரோப்பிய ஆணையம் ஓப்புதல் அளித்ததுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: மால்டோவா மீதான ரஷ்ய போர்: பிரதமர் நடாலியா கவ்ரிலிட்டா கவலை!
இந்தநிலையில், ஜப்பானில் முதல் குரங்கம்மை காய்ச்சல் பதிவாகி இருப்பதாக அந்த நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் இதற்கு முந்தைய நாள் குரங்கம்மை நோய் பரவல் காரணமாக ஜப்பான் அரசாங்கம் டோக்கியோவில் அவசர கூட்டம் ஒன்றை கூட்டி, அதன் மூலம் குரங்கம்மை நோயிற்கான லெவல்-ஒன் எச்சரிக்கையை வெளியிட அரசாங்கம் முடிவு செய்துள்ளது.