அமித் ஷா குரலில் பேசி முன்னாள் வங்கி ஊழியரிடம் ரூ.4 கோடியை ஏமாற்றிய உறவினர்
இந்திய அமைச்சர் அமித் ஷா குரலில் பேசி முன்னாள் வங்கி ஊழியர் ஒருவரிடம் உறவினர் ஒருவர் ரூ.4 கோடியை மோசடி செய்துள்ளார்.
ரூ.4 கோடி மோசடி
53 வயதான ஓய்வுபெற்ற வங்கி ஊழியரை அவரது உறவினர் அமித் ஷா குரலில் பேசி ரூ.4 கோடி மோசடி செய்துள்ளார்.
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, புனேவை சேர்ந்த முன்னாள் வங்கி ஊழியர் சூர்யகாந்த் தோரட்(53). இவருடைய உறவினர் ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டில் இவரை தொடர்பு கொண்டு தன்னுடைய மகன் உளவுத்துறையில் பணியாற்றுவதாகவும், அவருக்கு இந்திய அரசு ரூ.38 கோடி பரிசளிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பின்னர், செயல்முறை கட்டணம், வழக்கறிஞர் கட்டணம், மூத்த அதிகாரிகளுக்கு பரிசு வழங்குவதற்காக தனக்கு பணம் தேவைப்படுவதாக கூறியது மட்டுமல்லாமல், பரிசு பெற்றவுடன் வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரை நம்ப வைப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரின் குரலில் கான்பரன்ஸ் காலில் பேச வைத்துள்ளார்.
இதனால் கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பல்வேறு வங்கிக்கணக்குகளில் ரூ.4 கோடி வரை அனுப்பியுள்ளார் சூர்யகாந்த்.
இதையடுத்து, வாங்கிய பணத்தை திருப்பி கேட்டபோது தனது மகன் சிறப்பு பணிக்காக வெளிநாடு சென்றிருப்பதாக கூறியுள்ளார்.
பின்னர், தான் ஏமாந்து விட்டதை அறிந்த சூர்யகாந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |