கண் பார்வையை இழந்த சல்மான் ருஷ்டி! வெளியான அறிக்கை
சல்மான் ருஷ்டி சாத்தானின் வேதங்கள் என்ற புத்தகத்தை எழுதியது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
அமெரிக்காவில் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மர்ம நபர் ஒருவரால் கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளானார்
அமெரிக்காவில் கத்தி தாக்குதலுக்கு ஆளான எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, ஒரு கண்ணில் பார்வையை இழந்ததாக அறிக்கை வெளியாகியுள்ளது.
கடந்த ஆகத்து மாதம் 22ஆம் திகதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இந்திய வம்சாவளி எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கத்திக் குத்து தாக்குதலுக்கு ஆளானார்.
அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக பென்சில்வேனியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 75 வயதாகும் சல்மான் ருஷ்டிக்கு, கண் உட்பட 15 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டிருந்தன.
இந்த நிலையில் சல்மான் ருஷ்டியின் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கண்ணில் நரம்புகள் துண்டிக்கப்பட்டதால் அவர் கண் பார்வையை இழந்துள்ளதாகவும் அறிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
Reuters