காசா மீது மீண்டும் தாக்குதல்: புதிய அரசு அமைந்து இது முதல்முறை
இஸ்ரேலிய படைகள் காசா பகுதியில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலில் புதிய கூட்டணி அரசாங்கம் ஆட்சியைப் பிடித்த பின்னர் நடந்த முதல் தாக்குதல் சம்பவமாக பார்க்கப்படுகிறது.
உள்ளூர் நேரமான புதன்கிழமை அதிகாலை 1:00 மணியளவில் காசாவில் பல இடங்களில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்கப்பட்டது என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஆனால், ஹமாஸ் போராளிக்குழுவால் இயக்கப்படும் வானொலி நிலையம் ஒன்று, பாலஸ்தீனிய பயிற்சி முகாமை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறியது.
Video reportedly of an IDF strike in southern Gaza this evening. pic.twitter.com/X9NgCjGOqX
— Emanuel (Mannie) Fabian (@manniefabian) June 15, 2021
இந்த விவகாரம் தொடர்பில் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல, ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.