திடீரென இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்... இடிபாடுகளில் புதைந்த குழந்தைகள் உட்பட குடியிருப்பாளர்கள்! வெளியான பரபரப்பு காட்சி
ஜார்ஜியாவில் 5 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்த விழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Batumi நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. கட்டிடத்தின் இடிபாடுகளில் குழந்தைகள் உட்பட குடியிருப்பாளர்கள் பலர் புதைந்ததாக கூறப்படுகிறது.
Adjara பிராந்திய அரசாங்கத்தின் தலைவர் Tornike Rizhvadze மற்றும் பிராந்திய சுகாதார அமைச்சர் Nino Nizharadze சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக, மீட்பு பணியாளர்கள் அடுக்குமாடி குடியிருப்பின் மற்ற பகுதிகளில் இருந்த குடியிருப்பாளர்களை வெளியேற்றி முழுவதையும் காலி செய்துள்ளனர்.
சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி முழுவதையும் பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடத்தில் குவிந்துள்ளனர்.
இணையத்தில் வெளியான வீடியோக்களில், மீட்பு பணியாளர்கள் சக்திவாய்ந்த இயந்திரங்களை கொண்டு கட்டிட இடிபாடுகளை அகற்றி வருவதை காட்டுகிறது.
Local media reports that residents, potentially including children, may be buried beneath the rubble. No information about the causes of the collapse have yet been made public.#Batumi #Georgia pic.twitter.com/iGVuBxdrrf
— 🌎 Sarwar 🌐 (@ferozwala) October 8, 2021
கட்டிட இடிபாடுகளில் குழந்தைகள் உட்பட குடியிருப்பாகரள் பலர் புதைந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Rescuers at scene after residential building collapses in #Georgia's #Batumi, reports of people under rubble, including children
— 🌎 Sarwar 🌐 (@ferozwala) October 8, 2021
Emergency services are responding after part of a five-story apartment building collapsed in Georgia's second city, Batumi, on Friday pic.twitter.com/KRUgYKVetd
எனினும், கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியாகவில்லை.