காசா மருத்துவமனை தாக்குதலுக்கு பதிலடி: ராக்கெட் மழை பொழிந்த ஹமாஸ்...
ஹமாஸ் ஆயுதக்குழு நேற்று மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ராக்கெட் மழை பொழிந்த ஹமாஸ்...
நேற்று, இஸ்ரேல் மீது ராக்கெட்களை சரமாரியாக வீசியது ஹமாஸ். வெளியாகியுள்ள காட்சிகளில் வானில் பட்டாசுகள் வெடிப்பதுபோல் தோன்றும் காட்சிகள், உண்மையில் ஹமாஸ் வீசிய ராக்கெட்கள் ஆகும்.
ஆனால், இந்த தாக்குதலில் யாராவது பாதிக்கப்பட்டார்களா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. அப்பாவி பாலஸ்தீனர்களை இஸ்ரேல் படுகொலை செய்ததற்கு பதிலடி கொடுப்பதற்காக இந்த ராக்கெட் மழை பொழிந்ததாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி இருக்கும்போதே தாக்குதல்
இந்த தாக்குதல்கள் நடக்கும்போது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலில்தான் இருந்தார். காசா மருத்துவமனை தாக்குதல் குறித்து பேசிய அவர், இந்த தாக்குதல் உங்கள் தரப்பில் நிகழ்த்தப்படவில்லை, இதை நிகழ்த்தியது அந்த கூட்டம்தான் என தெரிகிறது என ஹமாஸ் குழுவினர் மீது மறைமுகமாக குற்றம் சாட்டினார்.
இதற்கிடையில், ஹமாஸ் இரட்டை போர் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.
ஹமாஸ், இஸ்ரேல் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது மட்டுமின்றி, பாலஸ்தீனிய பொதுமக்களை மனிதக்கேடயமாக பயன்படுத்துவதாகவும், அவர்களையும் பாதிப்புக்குள்ளாக்குவதாகவும் தெரிவித்தார் அவர்.
மேலும், காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது ஹமாஸ்தான் என்று கூறிய அவர், அவர்கள் வீசிய ராக்கெட் ஒன்றே தவறுதலாக மருத்துவமனை மீது விழுந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |