உலகின் 20 பணக்கார நாடுகளுக்கு... பருவநிலைகளுக்கான அமெரிக்க தூதர் புதிய வேண்டுகோள்
பருவநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களைத் தவிர்க்க உலகின் பணக்கார நாடுகள் தங்களது வாக்குறுதிகளை துடிப்புடன் நிறைவேற்ற வேண்டும் என அமெரிக்காவின் காலநிலைகளுக்கான தூதர் ஜான் கெர்ரி கருத்து தெரிவித்துள்ளார்.
COP27 என்று அழைக்கப்படும் பருவநிலை மாறுபாடுகளின் மாநாடு எகிப்தின் Sharm el-Sheikh-கில் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் உலக பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 65 சதவிகிதம் வரை பங்களிக்கும் உலகின் 20 பணக்கார நாடுகள், வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸ் வரை குறைப்பதாக ஐ.நா கடந்த வருடம் நடத்திய கிளாஸ்கோவில் உறுதியளித்தது அதேபோல் தற்போதும் தங்களது வாக்குறுதிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த 20 நாடுகள் தான் அதிகமான பசுமை இல்ல வாயுவை வெளியிடுகின்றன, அதனால் இவர்கள் பருவநிலை தொடர்பாக முன்னெடுப்புகளை செய்தால், நிச்சியமாக நாம் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் முதலிடுகளை சிலர் மேற்கொள்கின்றனர். ஆனால் இவை போதுமானதாக இல்லை என்பதால், பருவநிலை மாற்றம் தொடர்பான முன்னெடுப்புகளை கூடுதலாகவும் விரைவாகவும் செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கரொனா பெருந்தொற்று மற்றும் ரஷ்ய உக்ரைன் இடையிலான போர் பதற்றம் ஆகியவற்றை நிவர்த்தி செய்வதில் உலக நாடுகள் கவனம் செலுத்துவதால் பருவநிலை மாற்றம் தொடர்பான உலக நாடுகள் கவனம் சிறிது திசை திரும்பி இருப்பதாக தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: பாம்பு தீவை கலங்கடித்த உக்ரைன் ஏவுகணைகள்: அதிரடி தாக்குதல் வீடியோ!
மேலும் சிலர் ஏரிப்பொருள் படிவங்களை தங்களது ஆயுதங்களாக பயன்படுத்த நினைப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடினை மறைமுகமாக குறிப்பிட்டு காலநிலைகளுக்கான தூதர் ஜான் கெர்ரி கருத்து தெரிவித்துள்ளார்.