ஹரி விவகாரத்தில் உறுதியான முடிவுடன் சார்லஸ் மன்னர்: தந்தையாக முன்னெடுக்கும் முயற்சி
ஹரியுடன் மீண்டும் உறவை புதுப்பிக்க முடியும் என்ற நம்பிக்கை சார்லஸ் மன்னருக்கு இன்னமும் இருப்பதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மன்னர் சார்லஸ் திட்டம்
இதன் முதற்கட்டமாக, ஹரி இனி எப்போது தொடர்புகொண்டாலும், அழைப்பை ஏற்க சார்லஸ் மன்னர் முடிவு செய்துள்ளாராம். இதனால் ராஜகுடும்பத்தின் மீது அவருக்கிருக்கும் மனக்கசப்புகள் கரைந்து, அவரை மே 6ம் திகதி முடிசூட்டும் விழாவுக்கு அழைத்துவர மன்னர் சார்லஸ் திட்டமிட்டு வருகிறாராம்.
@getty
இளவரசர் ஹரியின் நினைவுக்குறிப்புக்கள் புத்தகமானது உலகெங்கும் எதிர்வரும் 10ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராதாவகையில் ஸ்பெயின் நாட்டில் முன்னரே விற்பனையை தொடங்கிவிட்டார்கள்.
இந்த நிலையில், அந்த புத்தகத்தின் முக்கிய பதிவுகள் தற்போது வெளியாகி ஒருபக்கம் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், அந்த விடயம் தொடர்பில் இதுவரை அரண்மனை வட்டாரத்தில் இருந்தோ, ராஜகுடும்பத்து உறுப்பினர்களோ ஒரு வார்த்தை கூட கருத்து தெரிவிக்கவில்லை.
வில்லியம் தாக்கியதில் ரத்த காயத்துடன் திரும்பியது, கேட் மிடில்டன் மற்றும் மேகன் மெர்க்கலுக்கு இடையேயான மோதல் உருவான கதை, கமிலா மீது தமக்கு ஏற்பட்ட அச்சம் என பல்வேறு தகவல்களை ஹரி தமது நினைவுக்குறிப்பில் அம்பலப்படுத்தியுள்ளார்.
உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை
இந்த நிலையில், உளவியல் நிபுணர்கள் தரப்பு விடுத்துள்ள எச்சரிக்கையில், அரண்மனை விவகாரங்கள் இப்படி அம்பலமாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும், ராஜகுடும்பத்தால் மட்டுமே அந்த காயங்களை குணப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
@ap
சார்லஸ் தற்போது மன்னராக இருந்தாலும், முதலில் அவர் ஹரிக்கு தந்தை. வெளிவரும் தகவல்கள் அனைத்தும் அவரையும் காயப்படுத்தும். அப்படியான ஒரு சூழலில் இயற்கையாகவே இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற தேவை அவருக்கு இருக்கும் என்கிறார்கள் அரண்மனை ஆதரவாளர்கள்.
இது குடும்ப விவகாரம், அல்லாது அரண்மனைக்கும் அரசியலமைப்புக்கும் எதிரான விவகாரமல்ல என குறிப்பிட்டுள்ளார் ராணியாருக்கு 12 ஆண்டுகள் செய்தித்தொடர்பாளராக இருந்த ஒருவர்.
ஹரி வெளிப்படையாக பேசுவது அவரது உரிமை, நாம் தற்போது ஒருபக்கம் மட்டுமே கேள்விப்படுகிறோம், நாம் வேறு எதையும் கேள்விப்படுவதில்லை, ஏனென்றால் அரச குடும்பம் புத்திசாலித்தனமாக இருப்பதால் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்றார் அவர்.