ரிஷப் பாண்ட் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கோஹ்லி செய்த செயல்! கடுப்பான வீடியோ
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கோஹ்லி ரிவ்யூவை வீணடித்த வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில், இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மொகமது சிராஜ் வீசிய ஓவரை, இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் எதிர் கொண்டார்.
அப்போது அந்த ஓவரின் மூன்றாவது பந்தை, ரூட் தடுத்து ஆட முற்பட, ஆனால் பந்தானது ரூட்டின் கால்காப்பில் பட்டது. உடனே சிராஜ் எல்.பி.டபில்யூ கேட்டு நடுவரிடம் முறையிட்டார்.
Mohammad Siraj convinced Virat Kohli to take the review of Joe Root, but Rishabh Pant was denying. pic.twitter.com/WepEASpDWH
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 13, 2021
ஆனால் நடுவர் அவுட் இல்லை என்று கூற, உடனே சிராஜ் கேப்டன் கோஹ்லியிடம் ரிவ்யூ எடுக்கும் படி கூறினார். ஆனால், விக்கெட் கீப்பரான ரிஷப் பாண்ட் வேண்டாம், வேண்டாம் என்று கூற, கோஹ்லி சிரித்து கொண்டே ரிவ்யூவுக்கான நேரம் முடிவதற்குள் கடைசி நொடியில் ரிவ்யூ எடுத்தார்.
இதைக் கண்ட ரிஷப்பாண்ட் சற்று கோபடைந்தார். அப்போது கோஹ்லி மற்றும் அவருக்கும் சின்ன வாக்குவாதம் போனது. ரிவ்யூவிலும் அவுட் இல்லை என்பது உறுதியானது.
இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் ரிவ்யூவை வீணடிப்பதை கோஹ்லி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 119 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ஓட்டங்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.