சாதனை மேல் சாதனை படைத்த பண்ட்! புதிய வரலாறு..இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் விளாசல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான லீட்ஸ் டெஸ்டில் ரிஷாப் பண்ட் புதிய வரலாறு படைத்தார்.
ரிஷாப் பண்ட் அபாரம்
லீட்ஸின் ஹெடிங்கலே மைதானத்தில் நடந்து வரும் டெஸ்டில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சிலும் ஆதிக்கம் செலுத்தியது.
ஜெய்ஸ்வால் (4), கில் (8) ஆகியோர் சொதப்ப, சாய் சுதர்ஸன் 30 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷாப் பண்ட் நங்கூர பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பொறுப்புடன் நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல், டெஸ்டில் தனது 9வது சதத்தினை பதிவு செய்தார்.
மறுமுனையில் அவ்வப்போது சிக்ஸர், பவுண்டரி என மிரட்டிய ரிஷாப் பண்டும் சதம் விளாசினார். இதன்மூலம் அவர் பல சாதனைகளை படைத்தார்.
புதிய வரலாறு
இங்கிலாந்து மண்ணில் இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட்தான்.
அதேபோல், ஜிம்பாப்பேயின் ஆன்டி பிளவருக்கு பின் (142 & 199*) இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய இரண்டாவது விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் (Rishabh Pant) ஆவார்.
மேலும், இந்த சாதனையை செய்த ஒட்டுமொத்த இந்திய துடுப்பாட்ட வீரர்களில் 7வது வீரராக பண்ட் இணைந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |