ஒற்றை கையில் 2 முறை சிக்ஸர் பறக்கவிட்ட ரிஷப்! மிரண்டு போன CSK வீரர்கள்: தீயாய் பரவும் வீடியோ
சென்னை அணிக்கெதிரான போட்டியில், டெல்லி அணியின் கேப்டன் ஆன ரிஷப் பாண்ட் ஒற்றைக் கையில் இரண்டு முறை சிக்ஸர் பறக்கவிட்ட வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் குவாலிபையர் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்கள் குவித்தது.
டெல்லி அணியில் அதிகபட்சமாக வீரர் ப்ரித்வி ஷா 60 ஓட்டங்களும், ஹிட்மயர் 37 ஓட்டங்களும், கடைசி கட்டத்தில் சென்னை அணியின் பந்து வீச்சை அடித்து துவைத்த ரிஷப் பாண்ட் அவுட்டாகமல் 51 ஓட்டங்கள் குவித்தார்.
— Simran (@CowCorner9) October 10, 2021
குறிப்பாக ரிஷப் பாண்ட் இந்த போட்டியில் இரண்டு முறை ஒற்றை கையில் சிக்ஸர்கள் பறக்கவிட்டார்.
ஆட்டத்தின் 15.2-வது பந்தை சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்தூல் தாகூர் வீசினார். இதை லெக்திசையில் ரிஷப் ஒற்றைக் கையில் சிக்ஸர் பறக்கவிட்டார்.\
அதே போன்று பிராவோ வீசிய ஓவரின் போது, யாரும் எதிர்பார்க்காத வகையில், ஸ்டிரைட் திசையில் ஒற்றைக் கையில் சிக்ஸர் பறக்கவிட்டார்.
இதைக் கண்ட சென்னை அணி வீரர்களான பலர், ஆச்சரியமான செய்கை செய்தனர்.