இந்திய அணியில் ரிஷப் பாண்ட்டை தொடர்ந்து மற்றொரு வீரருக்கு கொரோனா! யார் அவர் தெரியுமா? வெளியான தகவல்
இந்திய அணியில் ரிஷப் பாண்ட்டை தொடர்ந்து மற்றொரு வீரருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி வரும் ஆக்ஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி, இங்கிலாந்தில் உள்ளது.
இந்நிலையில், லண்டனில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டியை காண சென்ற இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்க்கு கொரோனா உறுதியான தொடர்ந்து தற்போது மற்றொரு விக்கெட் கீப்பர் ஆன சகாவிற்கும் கொரோனோ உறுதியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே 2 பேருக்கு இந்திய அணியில் கொரோனா பாதிப்பு, தற்போது ரிஷப் பாண்ட் மற்றும் சகா என 2 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதல, மொத்தம் இந்திய அணியில் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியில் இப்படி அடுத்தடுத்து வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதால், இந்த தொடர் நடக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.