எதிர்ப்புகளை மீறி ரிஷியின் பிரெக்சிட் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு வெற்றி: ரிஷிக்கு மீண்டும் ஒரு வெற்றி...
பிரெக்சிட்டைத் தொடர்ந்து, அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதைத் தொடர்ந்து, இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் பகுதிகளிலிருந்து வட அயர்லாந்துக்கு சரக்குகள் அனுப்புவதில் பிரச்சினை உருவானது.
புதிய பிரெக்சிட் ஒப்பந்தம்
இந்த பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் ஒன்றிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தை சம்மதிக்கவைத்தார் பிரித்தானிய பிரதமரான ரிஷி சுனக்.
அந்த ஒப்பந்தம் வட அயர்லாந்து பிரச்சினை விடயத்தில் மிகப்பெரும் வெற்றியாக பாராட்டுகள் பெற்றது.
Credit: Alamy
வட அயர்லாந்து தரப்பிலிருந்து உருவான எதிர்ப்பு
ஆனால், வட அயர்லாந்தின் The Democratic Unionist Party என்னும் கட்சி, ஒப்பந்தத்திற்கெதிராக ஒருமனதாக வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தது.
அயர்லாந்துக் குடியரசுடன் நிலப்பரப்பை பகிர்ந்துகொள்ளவேண்டியுள்ளதற்காக, வட அயர்லாந்தின் மீது ஐரோப்பிய ஒன்றிய விதிகள் திணிக்கப்படுவதை ஏற்க முடியாது என அக்கட்சியினர் தெரிவித்தார்கள்.
ஒப்பந்தத்தில் இன்னும் பல மாற்றங்கள், விளக்கங்கள் தேவை என அவர்கள் கூறியுள்ளார்கள்.
Credit: Alamy
ரிஷியின் கட்சியினரே எதிர்ப்பு
இதற்கிடையில், ரிஷி சார்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியினரே ரிஷியின் ஒப்பந்த்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர்களாக இருந்த போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ் மற்றும் Iain Duncan Smith ஆகியோரே ரிஷியின் திட்டத்தை எதிர்த்தார்கள்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், ரிஷியின் புதிய பிரெக்சிட் மசோதா நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ், Sir Jake Berry, பிரீத்தி பட்டேல் மற்றும் Simon Clarke ஆகியோர், The Democratic Unionist கட்சியினர் என பலரும் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க, யாரும் எதிர்பாராத விதமாக 48 கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பிலிருந்து விலகிக்கொண்டனர்.
ஆக, மசோதாவுக்கு ஆதரவாக 515 பேரும், எதிராக 29 பேரும் வாக்களிக்க, 486 வாக்குகள் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது மசோதா. ரிஷியைப் பொருத்தவரை, இது அவருக்கு மீண்டும் ஒரு வெற்றியாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
Credit: Sky News