எச்சரிக்கை! கொரோனா தாக்கினால் 2 வாரங்களில் மாரடைப்பு வரலாம் - ஆய்வில் தகவல்
கொரோனா தாக்கிய 2 வாரங்களில் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளதாக ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று ஒருவரைத் தாக்கிய முதல் 2 வாரங்களில் மாரடைப்பும், பக்கவாதமும் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக ‘The Lancet’ பத்திரிகையில் ஆய்வுத்தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 1 முதல் செப்டம்பர் 14, 2020 வரை ஸ்வீடனில் 3,48,481 COVID-19 நோயாளிகளில் 86,742 நோயாளிகளுக்கு கடுமையான மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட்டத்தை இந்த ஆய்வு ஒப்பிட்டது.
இதுபற்றிய ஆய்வை நடத்திய சுவீடன் நாட்டின் Umea பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஒஸ்வால்டோ பொன்சேகா ரோட்ரிக்ஸ் (Osvaldo Fonseca Rodriguez) கூறும்போது, “கொரோனா வைரஸ் தொற்று தாக்கிய முதல் 2 வாரங்களில் மாரடைப்பும், பக்கவாதமும் ஏற்படும் ஆபத்து 3 மடங்கு அதிகரித்து இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்” என தெரிவித்தார்.
மற்றொரு ஆராய்ச்சியாளரான ஐயனிஸ் காட்சூலாரிஸ் (Ioannis Katsoulari) , “கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவது எவ்வளவு முக்கியம் என்பதை எங்கள் முடிவுகள் காட்டுகின்றன. குறிப்பாக கடுமையான இதய பாதிப்பு ஆபத்தில் இருக்கிற முதியவர்கள் தடுப்பூசி போடுவது முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
"The absolute risks are small, but further studies are needed to evaluate the time course of increased cardiovascular risk in patients with #COVID19 and to investigate possible mechanisms."
— The Lancet (@TheLancet) August 2, 2021
Marion Mafham and Colin Baigent provide a linked Comment. https://t.co/6YtIl4cJFW