அமெரிக்கா - கனடா எல்லைக்கு அருகே ஆற்றில் மூழ்கி 8 பேர் பலி - பரபரப்பு சம்பவம்!
கனடாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற 4 இந்தியர்கள் உட்பட 8 பேர் செயின்ட் லாரன்ஸ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றில் மூழ்கி 8 பேர் பலி
இது குறித்து கனடா போலீசார் கூறுகையில்,
கனடாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற 4 இந்தியர்கள் உட்பட 8 பேர் செயின்ட் லாரன்ஸ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் அக்வெசாஸ்னே அருகே ஆற்றங்கரையில் உள்ள சதுப்பு நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், ஒருவர் மட்டும் கிடைக்கவில்லை. அவரை தேடும் பணி நடந்து வருகிறது.
இறந்தவர்கள் இந்தியா மற்றும் ருமேனியாவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 3 வயதுக்குட்பட்ட 2 குழந்தைகளும் அடங்குவர்.
நேற்று முன்தினம் மதியம் கவிழ்ந்த படகு கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று ஆற்றிலிருந்து 2 உடல்களை போலீசார் மீட்டனர்.
கனடாவிற்குள் அல்லது அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்த சம்பவம் இதுவரைக்கும் 48 சம்பவங்கள் நடந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய அல்லது ருமேனிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்தான் என்றார்.