விதிகளை மீறினால் எச்சரிக்கை! பொது இடங்களில் சுற்றி திரியும் ரோபோக்கள்.. எங்கே தெரியுமா?
சிங்கப்பூரில் பொது இடங்களில் தவறாக நடந்து கொள்ளும் மக்களை கண்காணிக்கும் விதமாக ரோபோக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றது.
நாளுக்கு நாள் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி வளர்ந்து கொண்டே வருகிறது. அதனின் ஒரு பங்கு தான் ரோபோ. அதிக தொழில் நுட்பத்தின் வடிவமாய் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் தற்போது சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்த வகையில் சிங்கப்பூரில் மக்களை கண்காணிக்க பொது இடங்களில் ரோபோ பயன்பாட்டிற்கு கொண்டுவரபட்டுள்ளது. அந்த ரோபோவிற்கு சேவியர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோ பொது இடங்களில் மக்கள் தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
சாலையில் சரியாக வாகனங்களை நிறுத்தாமல் செல்பவர்கள், புகைப்பிடிப்பவர்கள், கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் போன்றவர்களை இந்த ரோபோ கண்காணித்து எச்சரிக்கும் என்று கூறப்படுகிறது.
மக்கள் இந்த ரோபோக்களை ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர். கடந்த மாதம் நடத்திய சோதனையில் வெற்றி பெற்றதால் நாடு முழுவதும் ரோபோக்களை ஈடுபடுத்தும் பணியில் சிங்கப்பூர் அரசு ஈடுபடுத்தி வருகிறது.