ஜனாதிபதி மாளிகையில் ஈத் தொழுகையின் போது நடந்த பயங்கரம்! வெளியான அதிர வைக்கும் காட்சி
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே சரமாரி ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈத் பெருநாளை முன்னிட்டு காபூலில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் தொழுகை நடைபெற்றது.
இந்த தொழுகையில் ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானியும் கலந்துக்கொண்டார்.
தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்த போது மாளிகைக்கு அருகே ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
பயங்கர வெடி சத்தம் கேட்டபோதிலும் ஜனாதிபதி அஷ்ரப் கானி தொழுகையை தொடர்ந்தார்.
சுமார் 3 ராக்கெட்டுகள் தலைநகர் காபூலை தாக்கியதாக ஆப்கான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அரண்மனை மற்றும் பல தூதரகங்கள் இருக்கும் பசுமை மண்டலத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
VIDEO 🚨 Moment when Presidential Palace in Kabul hit by multiple rockets.
— Insider Paper (@TheInsiderPaper) July 20, 2021
pic.twitter.com/7zKgbXlnPM
இந்த ராக்கெட் தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.
#BreakingNews #Urgent
— RawNews1st🎥📰 (@Raw_News1st) July 20, 2021
Rocket attack near the Presidential Palace in downtown Kabul during #EidAlAdha2021 prayers. @Raw_News1st pic.twitter.com/o4FvvKNE7I