கேப்டனாக பொறுப்பேற்க இருக்கும் நிலையில் இணையத்தில் வைரலாகும் 9 ஆண்டுகளுக்கு முன் ரோகித் போட்ட ட்விட்
இந்திய டி20 அணியின் முழுநேர கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்க இருக்கும் நிலையில், 9 ஆண்டுகளுக்கு முன் அவர் போட்ட ட்விட் இன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுடன் இந்திய அணி வெளியேறியதை தொடர்ந்து கோலி, ரவி சாஸ்திரியின் கூட்டணி முடிவுக்கு வந்தது.
தற்போது, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேனை இந்திய டி20 அணியின் முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்க உள்ளார்.
இன்று ஜெய்பூரில் நடைபெறவிருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியிலிருந்து டிராவிட்-ரோகித் கூட்டணி தங்கள் பயணத்தை தொடங்குகின்றனர்.
இந்நிலையில், 2012ல் ரோகித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் போட்ட ட்விட் இன்று வைரலாகியுள்ளது.
அன்று ரஞ்சி கோப்பைக்கான மும்பை அணியின் கேப்டனாக ரோகித் தனது பயணத்தை தொடங்கினார்.
அவர் ரஞ்சி கோப்பைக்கான மும்பை அணி கேப்டனாக தனது பயணத்தை தொடங்கியதும் இதே ஜெய்பூர் மைதானத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்று தான் கேப்டனாக பொறுப்பேற்க உள்ளதை ரோகித் ட்விட்டரில் பகிர்ந்தார்.
நவம்பர் 7ம் தேதி 2012 இரவு 08:35 மணிக்கு அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது, ஜெய்பூரை சென்றடைந்துவிட்டேன், ஆம் நான் தான் என் அணியை வழிநடத்த இருக்கிறேன், கூடுதல் பொறுப்பேற்க ஆலலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் என ட்விட் செய்திருந்தார்.
இந்நிலையில், இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதே ஜெய்பூர் மைதானத்தில் இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோகித் தனது பயணத்தை தொடங்கவுள்ள நிலையில் 2021ல் அவர் போட்ட டவிட் தற்போது சூழ்நிலைக்கு ஏற்ப இருப்பதால் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.