நான் கற்றுக்கொடுத்ததையே என்னிடம் செய்துவிட்டார்! எதிரணி வீரர் உடனான போட்டி குறித்து மனம் திறந்த ரோகித்
இந்திய டி20 அணி கேப்டன் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் வீரரும், முக்கிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளருடனான போட்டியை குறித்து மனம் திறந்துள்ளார்.
நேற்று ஜெய்பூரில் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் விக்கெட்டை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் போல்ட் கைப்பற்றினார்.
போட்டிக்கு பின் பேசிய ரோகித் சர்மா, போல்ட் உடனான போட்டி குறித்து மனம் திறந்தார்.
ரோகித் கூறியதாவது, நானும் போல்ட்-ம் ஒன்றாக நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளோம்.
அவருக்கு எனது பலவீனம் தெரியும், எனக்கு அவரது பலம் தெரியும், எனவே இது எங்கள் இருவருக்கு இடையில் இருக்கும் ஆரோக்கியமான போட்டியாகும்.
நான் அவருக்கு கேப்டனாக இருக்கும் போது, எப்போதும் அவரை பந்தை ஏமாற்றி போடச் சொல்வேன். அதைத்தான அவர் எனக்கு செய்தார்.
அவர் மிட்-விக்கெட்டைப் பின்னுக்குத் தள்ளி, ஃபைன் லெக்கை முன்னே வைத்து, அவர் ஒரு பவுன்சரை வீசப் போகிறார் என்று எனக்குத் தெரியும், நான் அதை ஃபீல்டருக்கு மேல் அடிக்க முயற்சித்தேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பந்தில் அதிக வேகம் இல்லை என தான் அவுட்டான பந்து குறித்து ரோகித் விளக்கினார்.