ஒரு கேப்டனே இப்படி செய்யலாமா? - வைரலாகும் ரோகித் சர்மா வீடியோ
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா செய்த செயல் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்தது. இப்போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
Recreated ?? #RohitSharma #IndvsSl #Beast #MumbaiIndians @ImRo45 @mipaltan @MumbaiIndiansTN @Ro_TNpage45 pic.twitter.com/kGm5Ugwo5L
— Fan boy of Vijay anna (@Mahi_vijay22) March 14, 2022
இந்த போட்டியின் 2வது இன்னிங்ஸில் இலங்கை அணி பேட் செய்த போது ஜடேஜா வீசிய பந்தினை சில்வா எதிர்கொண்டார். அப்போது பந்து பேடில் பட உடனடியாக இந்திய வீரார்கள் அவுட் என அப்பீல் செய்தனர். ஆனால் நடுவர் அவுட் கொடுக்க மறுத்தார்.
அப்போது கேப்டன் ரோகித் சர்மா டிஆர்எஸ் கேட்பது போல சென்று கையைத் தூக்கினார். ஆனால் அப்படியே திரும்பி சிரித்துக் கொண்டே நடந்து சென்றார். களத்தில் அவ்வப்போது தான் இப்படியான ஜாலியான ரோகித் சர்மாவை பார்க்க முடிவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.