400 சிக்சர்கள்! டி20 கிரிக்கெட்டில் ரோகித் ஷர்மா படைத்துள்ள புதிய அசத்தலான சாதனை
டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஒட்டு மொத்தமாக 400 சிக்சர்கள் விளாசி இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக செவ்வாய்கிழமை நடைபெற்ற போட்டியில் ரோகித் ஷர்மா இந்த சாதனையை படைத்தார்.
இந்திய அணிக்காக 133 சிக்சர்கள், ஐபிஎல் தொடரில் 227 சிக்சர்கள் என 400 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரோகித் ஷர்மா.
ரோஹித்தை தவிர வேறு எந்த இந்திய வீரரும் 350க்கு மேல் சிக்சர்களை டி20 போட்டிகளில் அடிக்கவில்லை.
இந்த பட்டியலில் 1042 சிக்சர்கள் அடித்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். இரண்டாமிடத்தில் கிரன் பொல்லார்ட் 758 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பித்தக்கது.