10 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தாண்டில் ரோகித் சர்மா போட்ட சபதம்! தற்போது நிறைவேற்றி கெத்து காட்டினார்
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா 10 ஆண்டுகளுக்கு முன்னர் போட்டத்தை சபதத்தை நிறைவேற்றி காட்டியுள்ளார்.
ரோகித் சர்மா இந்திய அணிக்காக முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் 2007 ஆம் ஆண்டே விளையாடினார். ஆனால் போதிய வாய்ப்பு அப்போது அவருக்கு கிடைக்கவில்லை.
மேலும் அவருக்கு பின் அணிக்கு வந்த விராட் கோலி 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடி விட்டார் சர்வதேச கிரிக்கெட் விளையாடி 5 ஆண்டு ஆகியும் உலகக் கோப்பையில் விளையாட முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த ரோகித் சர்மா,2012 ஆம் ஆண்டு புத்தாண்டின் போது ஒரு புத்தாண்டு சபதத்தை போட்டு கொண்டார்.
அதில், எதையும் சாதாரணமாக எடுத்து கொள்ளாமல், அதிர்ஷ்டம் தான் எல்லாம் என்று நினைக்காமல், கடுமையாக உழைக்க வேண்டும் என்று பொருள்பட 10 ஆண்டுகளுக்கு முன் சமூகவலைதளத்தில் பதிவு போட்டார்.
அவர் சொன்னது போல், சரியாக 10 ஆண்டுகள் கழித்து இந்திய அணியின் தவிர்க்க முடியாத தலைச் சிறந்த வீரராகவும், கேப்டனாகவும் திகழ்ந்துள்ளார். சிறந்த டெஸ்ட் வீரர், கேப்டனாக 5 ஐ.பி.எல். கோப்பை, ஆசிய கோப்பை, ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதம், ஒருநாள் போட்டியில் 9205 ரன்கள், டி20 போட்டியில் 4 சதம் விளாசிய ஒரே வீரர் என்ற பல்வேறு சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.