கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை
தனது கடைசி டெஸ்டில் விளையாடும் ஏஞ்சலோ மேத்யூஸிற்கு, இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா பிரியாவிடை அளித்துள்ளார்.
கடைசி போட்டி
இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி காலியில் இன்று தொடங்கியுள்ளது.
மூத்த வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் (Angelo Mathews) இலங்கை அணிக்காக தனது கடைசி போட்டியில் களமிறங்கியுள்ளார்.
அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் பிரியாவிடை அளித்து வருகின்றனர். ஆடுகளத்திற்கு வந்த அவருக்கு சக அணி வீரர்கள் துடுப்பை உயர்த்திப்பிடித்து கௌரவப்படுத்தினர்.
பிரியாவிடை
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் ரோஹித் ஷர்மாவும் (Rohit Sharma) அவரை புகழ்ந்து பிரியாவிடை அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "ஹே ஏஞ்சி, உன்னுடைய அருமையான டெஸ்ட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். இது உன்னுடைய கடைசி போட்டி. உனக்கும், அணிக்கும் என் வாழ்த்துக்கள்.
பல ஆண்டுகளாக, நமது U - 19 நாட்கள் முதல் இன்றுவரை நல்ல சண்டைகளை (போட்டிகள்) சந்தித்திருக்கிறோம். நீ உன் தேசத்திற்கு ஒரு உண்மையான சேவகனாக இருந்திருக்கிறாய்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |