ரஹானேவுக்கு ஆப்பு வைத்து ரோகித் சர்மாவுக்கு பதவியை தூக்கி கொடுத்த பிசிசிஐ! தெரியவந்த காரணம்
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில், ரோகித்சர்மாவுக்கு துணை கேப்டன் பதவி கொடுக்கப்பட்டதன் காரணம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது,.
கோஹ்லி தலைமையிலான, இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
முதலில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான 18 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில், துணை கேப்டன் பதவியில் இருந்த அஜிங்கிய ரஹானே பதவி பறிக்கப்பட்டு, ரோகித்சர்மாவுக்கு துணை கேப்டன் பதவி கொடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு முக்கிய காரணம், ரஹானேவின் மோசமான பேட்டிங் பார்ம் தான் என்று கூறப்படுகிறது. ஏனெனில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அவருடைய பேட்டிங் அந்தளவிற்கு இல்லை, அதே போன்று ரஹானேவின் பேட்டிங் சமீபகாலமாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை என்ற காரணத்தினாலே பிசிசிஐ இந்த அதிரடி முடிவில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ரோகித்சர்மாவை பிசிசிஐ ஒருநாள் அணிக்கும் புதிய கேப்டனாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.