நிலவில் அணு உலை உருவாக்கும் திட்டம்: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனதிற்கு பிரித்தானியா நிதியுதவி
சந்திரனில் அணு உலையை உருவாக்க ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 2.9 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவி பெறுகிறது.
சந்திரனில் அணு உலை உருவாக்கும் ரோல்ஸ் ராய்ஸ்
பிரித்தானிய சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce), நிலவு தளங்களுக்கு நீண்ட கால ஆற்றல் மூலமாக செயல்படக்கூடிய அணு உலையை உருவாக்க பிரித்தானிய விண்வெளி ஏஜென்சியிடமிருந்து (UK Space Agency) நிதியுதவி பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸுக்கு கடந்த ஆண்டும் 249,000 பவுண்டுகளை ஆய்வுக்காக நிதி அளித்த பிரித்தானிய விண்வெளி ஏஜென்சி, இப்போது அணு உலை அமைக்க 2.9 மில்லியன் பவுண்டுகளை வழங்கியது.
Rolls-Royce
அணுசக்தியானது சந்திர பயணங்களின் நீளத்தை வியத்தகு முறையில் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்களின் கூறுகின்றனர்.
நிலவில் மனிதர்கள் வாழ, வேலை செய்ய உதவும்
மார்ச் 17 வெளியிட்ட செய்திக்குறிப்பில் , ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் UK விண்வெளி ஏஜென்சி ஆகியவை "நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் தேவையான சக்தியை வழங்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க" மைக்ரோ-ரியாக்டர் திட்டம் உதவும் என்று கூறியது.
''நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் தேவையான மின் சக்தியை வழங்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் மைக்ரோ ரியாக்டர் திட்டத்தில் ரோல்ஸ்ராய்ஸ் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைத்து விண்வெளிப் பயணங்களும், தகவல்தொடர்பு, உயிர் ஆதரவு மற்றும் அறிவியல் சோதனைகளுக்கான அமைப்புகளை ஆதரிக்கும் ஆற்றல் மூலத்தைச் சார்ந்தது. அணுசக்தி எதிர்கால சந்திர பயணங்களின் கால அளவையும் அவற்றின் அறிவியல் மதிப்பையும் வியத்தகு முறையில் அதிகரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது." என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rolls-Royce
இந்த திட்டத்திற்காக, ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் மேம்பட்ட உற்பத்தி ஆராய்ச்சி மையம் மற்றும் Nuclear AMRC, பாங்கோர் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் ரோல்ஸ் ராய்ஸ் இணைந்து வேலை செய்யவுள்ளது.
இந்த ஒப்பந்தம் பிரித்தானியாவின் விண்வெளித் துறையை மேம்படுத்தும் மற்றும் திறமையான வேலைகளை உருவாக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது.
2029-ஆம் ஆண்டிற்குள்...
"ரோல்ஸ் ராய்ஸின் இந்த புதுமையான ஆராய்ச்சி, நிலவில் மனிதர்கள் தொடர்ந்து இருப்பதற்கான அடித்தளத்தை அமைக்கலாம், அதே நேரத்தில் பரந்த இங்கிலாந்து விண்வெளித் துறையை மேம்படுத்துகிறது, வேலைகளை உருவாக்குகிறது மற்றும் மேலும் முதலீட்டை உருவாக்குகிறது," என்று பிரித்தானிய விண்வெளி ஏஜென்சியின் தலைமை நிர்வாகி பால் பேட் கூறினார்.
2029-ஆம் ஆண்டிற்குள் நிலவுக்கு வழங்கத் தயாராக இருக்கும் மட்டு மைக்ரோ-ரியாக்டருக்கான செயல்விளக்க மாதிரியை நிறுவனம் வைத்திருக்கும் என நம்புகிறது.
Rolls-Royce
50 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்கள் முதன்முறையாக சந்திரனுக்கு செல்ல தயாராகி வரும் நிலையில், சந்திர அடித்தளத்தின் பணிகள் தொடங்குகின்றன.