சீனாவில் இடிந்து விழுந்த 650 ஆண்டுகள் பழமையான மிங் வம்ச கோபுரம்! பெரும் அதிர்ச்சி!
சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் அமைந்துள்ள சுமார் 650 ஆண்டுகள் பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஃபெங்யாங் டிரம் கோபுரத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வு தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.
கோபுரத்தின் வரலாறு
கிழக்கு சீனாவில் உள்ள அன்ஹுய் மாகாணத்தில், ஃபெங்யாங் டிரம் கோபுரம் 1375 ஆம் ஆண்டு மிங் வம்சத்தினரால் கட்டப்பட்டது.
காலப்போக்கில், இந்த கோபுரத்தின் ஒரு பகுதி 1853 ஆம் ஆண்டில் கிங் வம்சத்தினரால் இடிக்கப்பட்டது.
எஞ்சியிருந்த பகுதி, அதன் வரலாற்று முக்கியத்துவத்தை கருதி, 1989 ஆம் ஆண்டில் கலாச்சார நினைவுச் சின்னமாக பட்டியலிடப்பட்டு பாதுகாக்கப்பட்டது.
La Torre del Tambor Ming Zhongdu colapsó apenas un año después de ser restaurada, generando preocupación por la calidad de los trabajos de conservación en #China. Las autoridades ya evalúan daños y preparan un nuevo plan.
— Janeth León M (@janethleontv) May 21, 2025
🎥 Redes Sociales pic.twitter.com/xbaVqaeURD
தற்போது, ஃபெங்யாங் டிரம் கோபுரம் சீனாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.
விபத்து மற்றும் பாதுகாப்பு
கோபுரத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தபோது, சம்பவ இடத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இருந்தனர்.
இருப்பினும், மேற்கூரை இடிந்த சமயத்தில் யாரும் கோபுரத்திற்கு அருகில் இல்லாததால், எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் நடந்த போது ஏற்பட்ட தூசிப் படலத்தின் காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி, 650 ஆண்டுகள் பழமையான ஒரு வரலாற்றுச் சின்னத்தின் மேற்கூரை இடிந்து விழுந்திருப்பது பரவலான அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |