இளவரசர் ஹரி மன்னருடைய முடிசூட்டுவிழாவில் கலந்துகொள்ளாவிட்டால்... எச்சரிக்கும் ராஜ குடும்ப எழுத்தாளர்!
இளவரசர் ஹரி மன்னருடைய முடிசூட்டுவிழாவில் கலந்துகொள்ளாவிட்டால், ராஜ குடும்பத்துடனான அவருடைய உறவு முறிந்துபோகும் அபாயம் உள்ளது என ராஜ குடும்ப எழுத்தாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
இளவரசர் ஹரிக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் மன்னருடைய முடிசூட்டுவிழா, ராஜ குடும்பத்துடன் இணைவதற்கு இளவரசர் ஹரிக்கு கிடைத்துள்ள இன்னொரு சந்தர்ப்பம் என்கிறார் ராஜ குடும்ப எழுத்தாளரான Alexander Larman.
அப்படி ஹரி மன்னருடைய முடிசூட்டுவிழாவில் கலந்துகொள்ளாவிட்டால், அது, ‘இனி எப்போதுமே ராஜ குடும்பத்துடன் நான் எந்த உறவும் வைத்துக்கொள்ளப்போவதில்லை’ என்று ஹரி கூறுவதாக அர்த்தமாகிவிடும் என்கிறார் அவர்.