இளவரசர் சார்லஸ் மன்னரானால்... பிரித்தானிய மகாராணியாருக்கு அவுஸ்திரேலியா விடுத்துள்ள எச்சரிக்கை
*இளவரசர் சார்லஸ் மன்னரானால், அவுஸ்திரேலியா அவருக்கு ஆதரவு தராது என அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
*ஏற்கனவே ஒரு முறை பிரித்தானிய மகாராணியாரின் ஆட்சியின் கீழ் இருந்து விடுதலை பெறுவது குறித்து அவுஸ்திரேலியாவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இளவரசர் சார்லஸ் பிரித்தானியாவின் மன்னராக பதவியேற்றால், அவுஸ்திரேலியா அவருக்கு ஆதரவளிக்காது என அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Malcolm Turnbull, 2015 முதல் 2018 வரை அவுஸ்திரேலியாவின் பிரதமராக பதவி வகித்தவர் ஆவார். பிரித்தானிய மகாராணியாரின் பதவிக்காலம் முடிவடைந்தால், அவுஸ்திரேலியாவை தனி குடியரசாக்குவது குறித்த விடயம் மீண்டும் தலைதூக்கும் என்கிறார் அவர்.
இளவரசர் சார்லசின் நடத்தை அதற்கு காரணம் என்று கூறமுடியாது என தான் கருதுவதாகத் தெரிவிக்கும் Turnbull, தேசத்துக்கு தனது எதிர்காலத்தைக் குறித்த கரிசனை ஏற்பட்டுள்ளது என்கிறார்.
@NBC
ஏற்கனவே, 20 ஆண்டுகளுக்கு முன், பிரித்தானிய மகாராணியார் அவுஸ்திரேலியாவின் தலைவராக இருப்பது குறித்து முடிவு செய்வதற்காக வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
அப்போது, 54.87 சதவிகித அவுஸ்திரேலிய மக்கள், பிரித்தானிய மகாராணியார் அவுஸ்திரேலியாவின் தலைவராக இருப்பதற்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
@Guardian