டோனியிடம் உடனே ஆட்டோகிராப் வாங்கினேன்! சென்னையை வெளுத்து வாங்கிய ஜெய்ஸ்வால் சொன்ன ரகசியம்
சென்னை அணிக்கெதிரான போட்டியில், சிறப்பாக விளையாடிய யாஷாவி ஜெய்ஸ்வால்க்கு டோனி கொடுத்த சிறப்பு பரிசு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய சென்னை அணிக்கெதிரான வாழ்வா?சாவா போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சென்னை அணி வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் சதம் அடித்து எப்படி மிரட்டினாரோ, அதே போன்று ராஜஸ்தான் அணியின் துவக்க வீரரான யாஷாவி ஜெய்ஸ்வால் 21 பந்தில் 50 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்நிலையில், போட்டி முடிந்த பின்பு இந்த போட்டி குறித்து ஜெய்ஸ்வால் கூறுகையில், நாங்கள் இந்த போட்டியில் சேசிங்கிற்கு தயாராகும் போது நிச்சயம் இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று நம்பினேன்.
இதன் காரணமாகவே அதிரடியாக விளையாடினேன். அதற்கேற்ற மாதிரி மைதானமும் கைகொடுத்ததால் என்னால் அதிரடியாக விளையாட முடிந்தது. அது மட்டுமின்றி லூஸ் டெலிவரிகள் கிடைத்தால் நிச்சயம் சிக்ஸர் விளாச வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே இருந்தது.
அதன்படியே சிறப்பாக விளையாடி எங்கள் அணிக்கு என்னால் முடிந்த பங்களிப்பை அளித்தேன் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்த போட்டி முடிந்த பின்னர் மகேந்திர சிங் டோனி தனது பேட்டியில் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார்.
அவர் அளித்த இந்த பரிசை என்னால் மறக்கவே முடியாது. இது என் வாழ்நாளில் ஒரு மறக்க முடியாத தருணம்.
மேலும், போட்டி முடிந்த பின்பு நான் என்னுடைய பேட்டை எடுத்துச் சென்று டோனியிடம் ஆட்டோகிராப் கேட்டேன் அவரும் போட்டு கொடுத்தார், இது ஒரு மறக்க முடியாக பரிசு என்று கூறினார்.
அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.