ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு லட்ச கணக்கில் அபராதம் விதித்த ஐபிஎல்! ஏதற்காக?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ஐபிஎல் லட்ச கணக்கில் அபராதம் விதித்துள்ளது.
செப்டம்பர் 21ம் திகதி (செவ்வாய்க்கிழமை) இரவு துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தா்ன ராயல்ஸ் அணி கடைசி ஓவரில் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப்பெற்றது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பந்து வீசாமல் ராஜஸ்தான் அணி அதிகமான நேரம் பந்து வீசுவதற்கு எடுத்துக்கொண்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஐபிஎல் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பந்து வீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்டது தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிமுறைகளின் கீழ் இந்த சீசனில் சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் அணியின் முதல் குற்றமாகும்.
சஞ்சு சாம்சனுக்கு ரூ .12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என ஐபிஎல் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.