இலங்கை வன்முறையில் ஆளும் கட்சி எம்.பி படுகொலை!
இலங்கை வன்முறையில் ஆளும் கட்சி எம்.பி படுகொலை செய்யப்பட்டதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை பொலிஸ் அதிகாரியை மேற்கோள்காட்டி AFP இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
நிட்டம்புவவில் இடம்பெற்ற வன்முறையில் ஆளும் கட்சி எம்.பி.அமரகீர்த்தி அத்துகோரள கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிட்டம்புவவில் எம்.பி.அமரகீர்த்தி அத்துகோரள தனது காரைத் தடுத்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்தனர்.
பின்னர் அருகில் உள்ள கட்டிடத்தில் எம்.பி.அமரகீர்த்தி அத்துகோரள தஞ்சம் அடைய முயன்றபோது அவர் சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மகிந்த ராஜினாமாவை பட்டாசு வெடித்து கொண்டாடிய இலங்கை மக்கள்! வெளியான வீடியோ