கப்பலிலிருந்து விழுந்த மகளை காப்பாற்ற கடலில் குதித்த தந்தை: பரவும் வதந்திகள்
டிஸ்னி சுற்றுலா கப்பலில் பயணித்துக்கொண்டிருந்த ஒரு நபரின் குழந்தை, கப்பலின் நான்காவது தளத்திலிருந்து கடலில் விழுந்த சம்பவம் தொடர்பில் வதந்திகள் பரவி வருகின்றன.
சொகுசுக் கப்பலிலிருந்து விழுந்த குழந்தை
ஞாயிற்றுக்கிழமையன்று, பஹாமாஸ் தீவுகளிலிருந்து ப்ளோரிடா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்துள்ளது, டிஸ்னி நிறுவனத்துக்கு சொந்தமான சுற்றுலா சொகுசுக் கப்பல் ஒன்று.
அப்போது, கப்பலின் நான்காவது தளத்தில், ஒருவர் தன் மகளை கைப்பிடி சுவர் மீது உட்காரவைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்ததாகவும், திடீரென அந்தக் குழந்தை தவறி கடலில் விழுந்ததாகவும் இணையத்தில் வதந்திகள் பரவி வருகின்றன.
ஆனால், உண்மையில் சம்பவம் நடக்கும்போது அந்தக் குழந்தையின் தந்தை அங்கு இல்லவே இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
குழந்தை விழுந்ததை அறிந்த அதன் தாய் சத்தமிடவே, அதன் தந்தை ஓடி வந்து கடலில் குதித்ததாகவும், குழந்தையைக் காப்பாற்றியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உண்மையில், தண்ணீருக்குள் விழுந்த தன் மகளை அந்தத் தந்தை தேடிப் பிடித்துவிட்டதாகவும், மீட்புக் குழுவினர் அங்கு வரும் வரை மகளை தண்ணீரில் மூழ்காமல் பாதுகாத்துக்கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |