ஐபிஎல்! மலிங்கா போன்ற ஜாம்பவான்கள் கூட செய்யாத சாதனையை படைத்த பிரபல வீரர்
மலிங்கா, டேல் ஸ்டெயின், ஜாகீர்கான் போன்ற ஜாம்பவான்கள் கூட படைக்காத ஒரு சாதனையை ஐபிஎல் போட்டியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் படைத்துள்ளார்.
15-வது ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியை குஜராத் அணி வீழ்த்தியது.
குஜராத் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் கொல்கத்தா சார்பில் ஆண்ட்ரே ரஸ்ஸல் கடைசி ஓவரில் 5 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்சின் கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ரஸ்ஸல் படைத்துள்ளார்.
அமித் மிஸ்ரா மற்றும் சஹால் ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் கடைசி ஓவரில் 4 விக்கெட்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.