விதிகளை மீறி நேட்டோ எல்லைக்கருகில் வந்த ரஷ்ய விமானப்படை விமானங்கள்: இடைமறித்த பிரித்தானியா
நேற்று சர்வதேச விதிகளை மீறி நேட்டோ எல்லைக்கருகே வந்த ரஷ்ய விமானப்படை விமானங்கள் மூன்றை, பிரித்தானிய விமானப்படை விமானங்கள் இடைமறித்துள்ளன.
சம்பவ இடத்துக்கு பிரித்தானிய விமானப்படை வந்தது எப்படி?
விடயம் என்னவென்றால், நேட்டோ அமைப்பு, தன்னுடைய பலத்தை ரஷ்யா முதலான நாடுகளுக்குக் காட்டும் வகையில், ஜேர்மனி தலைமையில் பிரம்மாண்ட போர்ப்பயிற்சி ஒன்றை மேற்கொள்ள உள்ளது.
RAF Typhoons from 140 EAW in Estonia were scrambled this afternoon to intercept a Russian Air Force IL-20 COOT A and 2x Su-27 FLANKER B flying close to @NATO airspace.
— Royal Air Force (@RoyalAirForce) June 14, 2023
The Russian aircraft failed to comply with international norms by not liaising with relevant FIRs.#WeAreNATO pic.twitter.com/lukgJaRp3P
நேட்டோவின் 25 உறுப்பு நாடுகளிலிருந்து 10,000 உறுப்பினர்களும், 250 விமானங்களும் இந்த போர்ப்பயிற்சியில் கலந்துகொள்கிறார்கள்.
Image: @RoyalAirForce/Twitter
அதற்காக, பிரித்தானிய விமானப்படை விமானங்கள், எஸ்தோனியா மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
Image: @RoyalAirForce/Twitter
அந்த விமானங்கள்தான், சர்வதேச விதிகளை மீறி நேட்டோ எல்லைக்கருகே வந்த ரஷ்ய விமானப்படை விமானங்களை இடைமறித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |