மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலுக்கு உக்ரைனிடமிருந்து கைமாறிய Crytocurrency, பணம்? நிதியாளர் அதிரடி கைது
ரஷ்யா நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நிதியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாஸ்கோ தாக்குதல்
சமீபத்தில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கச்சேரி அரங்கில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 143 பேர் கொல்லப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. உக்ரைனுக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக ரஷ்யா பகிரங்கமாக குற்றம்சாட்டியது.
இந்த நிலையில் ரஷ்ய அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய நிதியாளர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
விசாரணைக்குழு அறிக்கை
இதுகுறித்து ரஷ்யாவின் விசாரணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பயங்கரவாத தாக்குதலின் குற்றவாளிகள் உக்ரைனில் இருந்து குற்றத்தைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கணிசமான அளவு பணம் மற்றும் கிரிப்டோகரன்சியைப் பெற்றதாக சரிபார்க்கக்கூடிய தகவல் கிடைத்துள்ளது.
உக்ரைன் தேசியவாதிகளுடன் தொடர்புடைய கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகளின் மின்னணு சாதனங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகளை பகுப்பாய்வு செய்ததில் இருந்து தகவல்கள் தெரிய வந்துள்ளது. பயங்கரவாத நிதியுதவி திட்டத்தில் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்' என கூறியுள்ளது.
இதன்மூலம் குற்றவாளிகளுக்கு உக்ரைன் பாரிய தொகையை வழங்கியதாக ரஷ்யாவின் உயர்மட்ட புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |