பயணிகள் பேருந்து மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: சீறிப்பாய்ந்த 90 ட்ரோன்கள்
அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்யா தாக்குதல்
உக்ரைனின் தென் கிழக்கு பகுதியான டினிப்ரோபெட்ரோவ்ஸ்க்-கில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
பயணிகள் பேருந்து மீது குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் 7 பேர் வரை காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை அப்பகுதி ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு ரஷ்யா ட்ரோன் மற்றும் பீரங்கிகளை பயன்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீறிப்பாய்ந்த 90 ட்ரோன்கள்
இதற்கு முன்னதாக ரஷ்யா ஒரே நாள் இரவில் 90 ட்ரோன்களை ஏவி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
அத்துமீறிய ரஷ்ய ட்ரோன்களை உக்ரைனிய பாதுகாப்பு படை இடைமறித்த போதிலும், 14 உக்ரைனிய ட்ரோன்கள் உக்ரைனின் 9 இடங்களில் தாக்குதல் நடத்தி இருப்பதை உக்ரைன் பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது.
டினிப்ரோன் நகரில் நடந்த இந்த தாக்குதலில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |