புடின் சபதத்தின் பதிலடி: உக்ரைன் தலைநகரில் இரவு முழுவதும் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்
உக்ரைனில் இரவு முழுவதும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விளாடிமிர் புடினின் சபதம்
கடந்த வாரம் ரஷ்ய விமான தளங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. அப்போது உக்ரைனின் இந்த ட்ரோன் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் சபதம் எடுத்தார்.
அதன்படி உக்ரைனில் இரவு முழுவதும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு, தலைநகர் கீவில் 4 பேர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து உக்ரைனின் மாநில அவசர சேவை, "ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் சம்பந்தப்பட்ட மற்றொரு தாக்குதலுக்கு கீவ் உள்ளானது. நகரம் முழுவதும் பல இடங்களில் மீட்புப் பணியாளர்கள் அதன் விளைவுகளை சந்தித்து வருகின்றனர்" என டெலிகிராமில் எழுதியது.
இந்த தாக்குதலினால் கீவில் பல்வேறு மாவட்டங்களில் பல தீ விபத்துகள் ஏற்பட்டன. மேலும், இந்த தாக்குதல் சுற்றியுள்ள கீவ் பகுதியில் ரயில் தண்டவாளங்களையும் சேதப்படுத்தியது. இதனால் நீண்ட தாமதம் ஏற்பட்டதாக தேசிய ரயில்வே நிர்வாகி தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |