ஆண்களுக்கு புதிய தடை உத்தரவை வெளியிடவிருக்கும் ரஷ்யா: எல்லைகள் மூடப்படும்
உக்ரைனில் முன்வரிசையில் உள்ள துருப்புகளை நிரப்புவதற்கான முயற்சியில் உடனடி படைதிரட்டல்
துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கான விமான டிக்கெட்டுகள் கட்டணம் உச்சம் தொட்டுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் புதிய உத்தரவை அடுத்து நாட்டைவிட்டு வெளியேறும் ஆண்களை தடுக்கும் நோக்கில் எல்லைகளை மூட அதிகாரிகள் தரப்பு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஆண்கள் வெளியேறுவதை தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம் எனவும், செப்டம்பர் 28ம் திகதி புதிய விதிகள் அமுலுக்கு வரலாம் எனவும் கூறப்படுகிறது.
@getty
புதன்கிழமை அசாதாரண உரை ஒன்றை நிகழ்த்திய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனில் முன்வரிசையில் உள்ள துருப்புகளை நிரப்புவதற்கான முயற்சியில் உடனடி படைதிரட்டலை அறிவித்தார்.
ஆனால், குறித்த அறிவிப்பால் மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை எனவும், இராணுவத்தில் பணியாற்றி அனுபவம் இருப்பவர்கள் மட்டுமே உட்படுத்தப்படுவார்கள் எனவும் முதற்கட்டமாக 300,000 பேர்கள் திரட்டப்படுவார்கள் எனவும் பாதுகாப்பு அமைச்சர் Sergei Shoigu விளக்கமளித்துள்ளார்.
இருப்பினும், பொதுமக்களின் அச்சம் விலகவில்லை எனவும், எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகலாம் எனவும் தெரிவிக்கின்றனர். இதனையடுத்தே, இராணுவ வயதை எட்டிய ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தொடங்கினர்.
@getty
விசா தேவையில்லாத துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கான விமான டிக்கெட்டுகள் கட்டணம் உச்சம் தொட்டுள்ளது. இதனிடையே, 8,500 க்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் சனிக்கிழமையன்று அண்டை நாடான பின்லாந்திற்கு தரைவழியாகச் சென்றதாக ஃபின்னிஷ் எல்லைக் காவலர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மக்கள் திரளாக நாட்டைவிட்டு வெளியேறிவருவது புடின் நிர்வாகத்தை கோபமடைய செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், ரஷ்ய ஆண்கள் இராணுவத்தின் அனுமதியுடனே விசா பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.